Posts

Showing posts from April, 2018

மரப் பசு - தி ஜானகி ராமன்

மரப் பசு - தி ஜா ரா         தி ஜா வின் அம்மா வந்தாள் வாசித்த பின்னர் அவருடைய  மற்றொரு மாஸ்டர் பீஸ் நாவல் மரப்பசு ஆர்வத்துடன் வாங்கி படித்தேன். கதை ஒரு பெண்ணுடைய பார்வையில் இருந்து சொல்ல பட்டு இருந்தது. சற்றே பழைய நடை , 50 வருஷங்களுக்கு முந்தைய களம். உள் நுழைந்து செல்ல கொஞ்சம் கடினமாக இருந்தாலும் , கதை ஓட்டம்  ஒரு கட்டத்தில் நம்மை முழுமையாக இழுத்து கொண்டு விடுகிறது.  தமிழின் முதல் பெண்ணீய கருவை கொண்ட கதை என்று பின்னர் படித்து தெரிந்து கொண்டேன். இன்றும் கூட இவ்வளவு சுதந்திர சிந்தனை கொண்ட பெண்களை காண்பது அரிது தான்.  கதை நாயகி அம்மிணி போல ஒரு பெண் இருந்து வெளியே தெரிந்தால் அவர்களுக்கு என்ன மரியாதையை இன்றைய சமூகம் கொடுக்கும் என்பது தெரிந்ததே.       தஞ்சை மாவட்ட ;பகுதியை சேர்ந்த பிராமண குடும்பத்து பெண், கும்பகோணத்தில் உள்ள அவரது பெரியப்பா வீட்டில் வளர்கிறாள். சிறு வயதில் இருந்தே சுதந்திர சிந்தனையோடு கூடிய புத்திசாலியாகவும் எல்லா வற்றையும் சிரித்த படி எதிர் கொள்ளும் பெண்ணாக வளர்கிறாள். ...